என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்"
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள மரிமாணிக்குப்பம் ஊராட்சி ஓம குப்பம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.
இதனால் ஆததிரமடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆலங்காயம் -திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் முருகன், குருசிலாபட்டு மற்றும் ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்கள பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்து.
ஆரணி:
ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இ.பி. நகர் புதுத்தெருவில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பைப்லைன் மூலம் மினி டேங்க்கிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதுப்பற்றி அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.
அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. குடிநீர் வழங்கப்படாததால் கடந்த 15 நாட்களாக இ.பி.நகர் புதுத் தெரு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்திரமடைந்த மக்கள் குடிநீர் வழங்கக்கோரி ஆரணியில் இருந்து ராட்டினமங்கலம் செல்லும் புறவழிச் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.
ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கொசஸ் தலை ஆற்றில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் சேமித்து வைத்து குழாய்கள் மூலம் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்படுகிறது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் கிராம மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று விவசாய கிணறுகளிலிருந்து குடங்களில் குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி இன்று காலை அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சீதஞ்சேரி - பென்னாலூர்பேட்டை ரோட்டில் ‘திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பழுதடைந்த மின் மோட்டாரை சீர் செய்து குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் சீதஞ்சேரி - பென்னாலூர்பேட்டை இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்